அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

பொருள்களை வாங்கி சரியில்லை என்றால் பணம் திரும்ப தரப்படுமா?

அதற்கு இணையான பொருள்கள் திரும்பி வழங்கப்படும். அப்படி விருப்பவில்லை எனில் முழுப்பணம், பொருளை பெற்றுக்கொண்ட பின்னர் வழங்கப்படும்.

எங்கள் வீட்டு திருமணத்துக்கு ஆர்டர் கொடுக்க முடியுமா?

தாராளமாக… எங்களது இணையம் மூலமாகவே ஆர்டர் கொடுக்க முடியும். தங்கள் குறிப்பிடும் தேதியில் அனுப்ப சொல்லும் முகவரிக்கு அனுப்பி வைக்க முடியும்.

எங்கள் வீட்டுக்கு அருகில் உள்ள நண்பர்களுக்கு வாங்கி விற்க முடியுமா?

நிச்சயமாக முடியும். எங்களது விசாரணை பகுதியில் தங்களது விபரங்களை பதிவிட்டால் எங்களது விற்பனை பிரதிநிதி தங்களை தொடர்பு கொள்வார்.

தங்களது இணையத்தில் பொருட்களை ஆர்டர் கொடுத்து வேறு முகவரியில் உள்ள எனது நண்பருக்கு அனுப்ப முடியுமா?

முடியும். இந்தியாவின் எந்த பகுதிக்கும் ஆர்டர் கொடுத்து பெறவோ, அனுப்பவோ முடியும்.

இனிப்பு பிள்ளையார் நாளையே வேண்டுமென்றால் எத்தனை மணிக்குள் ஆர்டர் சொல்ல வேண்டும்?

முதல் நாள் மாலை 6 மணிக்குள் ஆர்டர் கொடுத்து பணம் செலுத்தப்பட்டால் மறுநாள் காலை சுமார் 11:00 மணி அளவில் தனியார் அஞ்சல் மூலம் தங்கள் முகவரிக்கு பெற்றுக்கொள்ள முடியும்.

(மன்னார்குடி நகர எல்லைக்குள் என்றால் மறுநாள் காலை ஏழு மணிக்கே பெற்றுக்கொள்ள முடியும்)

பருப்பு கூடு நங்கள் விரும்பும் தனிப்பட்ட அளவுகளில் கிடைக்குமா?

1 கிலோ முதல் 10 கிலோ வரையிலான எடைகளில் கிடைக்கும்.

பிறந்தநாளுக்காக சிறப்பு தொகுப்பு உண்டா?

பிறந்த நாட்களுக்கு என்று எங்களிடம் தனித்துவமான பைகள் உண்டு. மேலும் தனிப்பட்ட தங்களின் விருப்பங்கள் ஏதேனும் தங்களுக்கு இருந்து அதை எங்களுக்கு தெரியப்படுத்தினால் அதையும் சிறப்பு கவனம் செலுத்தி செய்து தர முடியும்.

தங்களது கடலை மிட்டாய் எத்தனை நாட்களுக்கு கெட்டுப்போகாது?

சாதாரண அறை வெப்பநிலை 30oC இருக்கும் சூழ்நிலையில் 120 நாட்கள் வரை நன்றாக இருக்கும். இருந்தாலும் 30 நாட்களுக்கு தேவையானதை மட்டும் வாங்கி பயன்படுத்துவது மிகவும் நன்று.

குளிர்சாதன பெட்டியில் கடலை மிட்டாய்களை வைக்கலாமா?

வைக்கலாம். கண்ணாடி அல்லது பிளாஸ்டிக் பாட்டில்களில் வைத்து தேவைப்படும்போது எடுத்து சாப்பிடுவது சுவை குன்றாமல் இருக்க செய்யும்.

குறிப்பு: freezerஇல் வைக்க வேண்டாம்.

மூன்று வேலையும் சாப்பிட்டபின் கடலை மிட்டாய் சாப்பிடலாமா?

சாப்பிட்டபின் இனிப்பு எடுத்துக் கொள்வது மிகவும் நல்லது அதுவும் கடலை மிட்டாயில் புரதச்சத்து அதிகம் இருப்பதால் தாராளமாக எடுத்துக் கொள்ளலாம் எந்தவித பின்விளைவுகளும் ஏற்படாது.

பிரதி மாதம் குறிப்பிட்ட தேதிகளில் கிடைக்கும்படி ஆர்டர் செய்ய முடியுமா?

தாங்கள் கேட்கும் தேதிகளில் ஆர்டர் செய்தால் நிச்சயமாக எங்களால் டெலிவரி செய்ய முடியும்.

வெளிநாடுகளுக்கு நீங்கள் அனுப்ப முடியுமா?

கண்டிப்பாக அனுப்ப முடியும்.

தங்கள் கடலைமிட்டாய் சுவையாக இருப்பதன் காரணம் என்ன?

நாங்கள் நாட்டு வெல்லத்தை மட்டுமே பயன்படுத்தி கடலை மிட்டாய் தயார் செய்கிறோம் வேதி பொருட்கள் ஏதும் நாங்கள் கலப்படம் செய்யவில்லை.

மற்ற கடலை மிட்டாய் போல நீண்ட காலத்துக்கு வைத்துக்கொள்ள முடியுமா?

நாங்கள் நாட்டு வெல்லத்தை மட்டும் பயன்படுத்துகிறோம் ரசாயன பொருட்கள் ஏதும் பயன்படுத்தாததால் 3 முதல் 4 மாதங்கள் வரை  எங்களது தயாரிப்புகளை  இருப்புவைத்துக்கொள்ள முடியும்.

கடலை மிட்டாய் ஒவ்வொரு முறையும் சுவை முன்பின் இருப்பது போல தோன்றுகிறதே?

நீங்கள் உணர்ந்தது மிகச்சரி என்பதால் ஒவ்வொரு தோட்டத்தின் கரும்பின் சுவை வேறுபடுவது போல அக்கரும்பின் மூலம் தயாரிக்கப்படும் நமது கடலை மிட்டாயின் மூலப்பொருளான வெல்லத்தின் சுவையும் சற்று முன்பின் இருக்கும்.

ஆகவேதான் அந்த வித்தியாசத்தை தங்களால் உணர முடிகிறது. இருந்தாலும், அச்சுவையும் தங்களுக்கு பிடித்த மாதிரியே இருக்கும்படி தயாரித்து தருகிறோம்.

பணம் செலுத்தி எத்தனை நாட்களுக்குள் எனக்கு கிடைக்கும்?

பணம் செலுத்திய அன்றே நாங்கள் பதிவு செய்து விடுவோம். தமிழ்நாட்டிற்குள் மறுநாள் மாலைக்குள் தங்கள் கைகளுக்கு கிடைத்துவிடும். ஒரு சில ஊர்களுக்கு மட்டும் இரண்டாம் நாள் கிடைக்கும். வெளி மாநிலங்களுக்கு மட்டும் மாநிலத்தை பொறுத்து நாட்கள் கூடலாம்.

சரக்கு வரவில்லையெனில் யாரிடம் புகார் அளிப்பது?

எங்களது வாடிக்கையாளர் சேவை மையத்தை எப்பொழுது வேண்டுமானாலும் அணுகி தங்களது புகார்களை தெரிவிக்கலாம்.

பொருட்களை கூரியர் மூலம் மட்டும் அனுப்புவீர்களா?

நீங்கள் அனுப்பும் ஆர்டர்களை பொறுத்து கூரியர் அல்லது லாரி பார்சல் சர்வீஸ் என முடிவு செய்யப்படும் (door டெலிவரி).

ஆர்டரின் நிலையை (status) எப்படி அறிந்து கொள்வது?

தங்களது தொலைபேசிக்கு SMS மற்றும் TRACKING DETAILS LINK அனுப்பி வைக்கப்படும். அதன் மூலம் STATUS அறிந்து கொள்ள முடியும்.

ஆர்டர் கேன்சல் செய்வது எப்படி?

தங்கள் ஆர்டர் STATUS கூரியர் இல் புக் செய்வதற்கு முன்நிலையில் தங்கள் ஆர்டர்ஐ ரத்து செய்திட முடியும். பணம் செலுத்தி இருந்தாலும் முழுப்பணமும் திரும்பபெற்றிடலாம்.

ஆர்டர் கொடுத்த பின் முகவரி / ஆர்டர் செய்த பொருள் மாற்றம் / எண்ணிக்கை மற்றம் / செய்ய முடியுமா?

தங்கள் ஆர்டர் STATUS கூரியர் இல் புக் செய்வதற்கு முன்நிலையில் தங்கள் ஆர்டரில் மாற்றம் செய்திட முடியும்.

மொத்தமாக (BULK) ஆர்டர் ஏற்றுக்கொள்ளப்படுகிறதா?

ஏற்றுக்கொள்ளப்படும்.

இணையதள விற்பனை என்பதால் விலை கூடுதலாக இருக்குமா?

தயாரிப்பாளர்களின் நேரடி விற்பனை என்பதால் விலை மிகவும் குறைவாகவே இருக்கும். தயார் செய்த அடுத்த நாளே தங்கள் இல்லத்துக்கு வந்து விடுவதால் சுவையும் அதிகமாகவே இருக்கும்.

இணையதள விற்பனை என்பதால் கூரியர் செலவு கூடுதலாக இருக்குமோ?

அப்படி ஒன்றும் இல்லை,

தமிழ்நாட்டிற்க்குள் ஒரு 1 Kg க்கு உத்தேசமாக ரூ.30/- ம் தென்னிந்தியாவிற்குள்  1 Kg க்கு ரூ.60/- ம்

 மட்டுமே கூடுதலாக செலவாகும்.